கொலையாளிகள் எவரும் சிறையில் இருப்பதில்லை – காணாமல் ஆக்கப்பட்டாரின் உறவினர்கள்

1 Protest
1 Protest

நீதி தூக்கிலிடப்பட்ட நாட்டில் கொலையாளிகள் எவரும் சிறையில் இருப்பதில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“தமிழர்கள் இலங்கையிலிருந்து பொறுப்புணர்வையும் நீதியையும் நம்பக்கூடாது. நாட்டின் உள்நாட்டுப் போரின்போது 8 அப்பாவிப் பொதுமக்களைக் கொன்றதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஓர் இராணுவ அதிகாரியை இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழ் மக்கள் ஒரு தேசமாக பிரிந்து போவதுதான் ஒரே தீர்வு. சர்வதேச விசாரணையை உள்ளக விசாரணையாக மாற்றியதன் விளைவுதான் இது.

கொன்றவனையே நீதிபதி ஆக்கும் உள்ளக விசாரணை வேண்டாம். கோழிகளுக்கு ஓநாய் பாதுகாவலன் என்று நம்பத் தமிழ் மக்கள் இனியும் தயாரில்லை. தமிழினப் படுகொலையாளிகளிடம் இருந்து தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு கேட்க ஐ.நாவிடம் சர்வஜன வாக்கெடுப்பைக் கோரவேண்டும்

இலங்கையின் நீதித்துறை சுயாதீனமாக இயங்கவில்லை. அதற்குள் ஆட்சியாளர்களினதும், இராணுவத்தினரினதும் தலையீடுகள் உண்டு. நாடு இராணுவத் தனத்தை நோக்கிப் போகின்றது. தமிழ் மக்கள் வஞ்சிக்கப்படுகின்றார்கள். ஒற்றையாட்சிக்குள் சேர்ந்து வாழ முடியாது” – என்றுள்ளது.