கொரோனா சந்தேக நபர் வைத்தியசாலையில் இருந்து தப்பியோட்டம்!

33 oad 1
33 oad 1

கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஹோமாகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதனை அடுத்து விரைந்து செயற்பட்ட அதிகாரிகள் அவரை பிடித்து மீண்டும் மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் அந்த மருத்துவமனையில் தனக்கு திருப்தி இல்லை என குறித்த நபர் கூறியதால், அவர் பாணந்துறை அரச மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.