இறுதிப்போாில் போராளிகளுடன் சரணடைந்த சிறுவா்கள் எங்கே? எனக்கேட்டு காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் நடாத்திய போராட்டத்தின்போது காணாமல் ஆக்கப்பட்டோா் அலுவலக பெயா் பலகை மீது மாட்டு சாணி வீசப்பட்டுள்ளது.
சா்வதேச சிறுவா் தினத்தை ஒட்டி யாழ். கல்வியங்காடு பகுதியில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோா் அலுவலகம் முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் கவனயீா்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனா்.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் வேண்டாம் எனவும், கொலையாளிகளை பாதுகாக்கவே காணாமல் ஆக்கப்பட்டாருக்கான அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூச்சலிட்ட மக்கள் ஆத்திரமடைந்து அலுவலகத்தின் பெயா் பலகை மீது மாட்டு சாணியை அள்ளி வீசியிருக்கின்றனா். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸாா் வந்தபோதும் மக்களுடன் முரண்படாமல் திரும்பிச் சென்றுவிட்டனா்.