ஜனாதிபதித் தேர்தலுக்கு இதுவரை 13 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்

election commision 1
election commision 1

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் ஒக்டோபர் 6ம் திகதி மதியம் 12 மணி வரை ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக இதுவரை 13 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

அதன்படி, இம்முறை ஜனாதிபதி ​தேர்தலுக்காக இதுவரை பதிவு செய்யப்பட்ட 9 அரசியல் கட்சிகளும் 4 சுயேட்சை வேட்பாளர்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

கெடகொட கமகே ஜயந்த பெரேரா, சிறிபால அமரசிங்க, அஜந்தா விஜேசிங்க பெரேரா, அபரெக்கே புஞ்ஞானந்த தேரர், வெலிசரகே சமன் பிரசன்ன பெரேரா, நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ, ஆரியவங்ச திஸாநாயக்க, சிறிதுங்க ஜயசூரிய, வர்ணகுலசூரிய மில்ரோய் சர்ஜியஸ் பெர்ணான்டோ, ரொஹான் பல்லேவத்த, சரத் மனமேந்திர, பல்லெவத்த கமராலலாகே , நம்புநாம நாணாயக்கார பல்லியகுருகே, வஜிரபானீ விஜேசிறிவர்தன ஆகியோர் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.