ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் கூட்டணி அமைப்பதற்குத் தடையாகவுள்ள சின்னம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்சவுக்கும் இடையில் நேற்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதியின் இல்லத்தில் இச்சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படு கின்றது.
ஜனாதிபதி மற்றும் பஸில் ராஜபக்ச தவிர்ந்த வேறு எவருக்கும் இந்த கலந்துரையாடலில் பங்குகொள்ள இடமளிக்கப்பட வில்லையெனவும் கூறப்படுகின்றது.
பொதுஜன பெரமுனவுடன் ஏற்பட்டுள்ள சின்னம் தொடர்பான முரண்பாடு குறித்து விரிவான முறையில் கலந்துரையாடப்பட்டதாகவும் இருப்பினும், இறுதித் தீர்மானம் ஒன்று எட்டப்படவில்லையெனவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.