சிறுவர் தினத்தை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்டம்; கிழக்கு பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு

IMG 20191002 WA0001
IMG 20191002 WA0001

சிறுவர் தினத்தை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்காகவும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காகவும் நீதி கோரி மட்டக்களப்பு காந்தி பூங்கா அருகாமையில் காணாமல் ஆக்கப்பட்டடோர் அமைப்பினர் நேற்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தின் போது கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிமும் தமது ஆதரவுகளை வழங்கியிருந்தது.

இதன் நிறைவில் சிறுவர்களுக்கு சிறு பரிசில்களும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.