புதிதாக கல்வி அமைச்சினால் இணைத்துக் கொள்ளப்பட்ட 1858 அதிபர்களுக்கு நேற்று முதல் மகரம கல்வியற் கல்லூரியில் உள்ளக பயிற்சி ஆரம்பமாகியுள்ளது.
இது தொடர்பான நிகழ்வில் கல்வி அமைச்சரும் சட்டத்தரணியுமான அகிலவிராஜ் காரிவசம் உரையாற்றினார். கல்வித் துறையில் உயர்தர வகுப்பு மாணவர்கள் டெப் கணனியில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள தற்போழுது வசதி செய்யப்பட்டுள்ளது.
இது இலவச கல்வியில் ஏற்பட்ட பாரிய புரட்சியாகும். இந்த புரட்சி விளையாட்டிற்குரிய விடயம் அல்ல. சர்வதேசத்துடன் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப கல்வி துறையில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு நாம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம் என அவர் தொரிவித்தார்.