மட்டக்களப்பு பதுளை வீதியில் விபத்து – 26 வயதுடைய இளைஞன் பலி

mathi
mathi

மோட்டார் சைக்கிலும் கனரக டிப்பர் வாகனமும் மோதுண்டதில் செங்கலடி அம்மன்புரத்தைச் சேர்ந்த 26 வயதுடைய மதியழகன் மோகன்ராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு-செங்கலடி கொடுவாமடு பிரதேசத்தில், செங்கலடி பதுளை பிரதான வீதியில் இன்று காலை 06.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

செங்கலடியிலிருந்து கித்துள் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிலும் இலுப்பையடிச்சேனையில் இருந்து செங்கலடி நோக்கி ஆற்றுமண் ஏற்றி வந்த கனரக டிப்பர் வாகனமுமே நேருக்கு நேர் மோதுண்டு இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.