ஜனாதிபதி தேர்தல் நிறைவடையும் வரையில் அரச நிகழ்வுகளில் அரசியல் சார்பான விடங்களை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்தால் அதற்கான முழுப்பொறுப்பும் அரச அதிகாரிகளையே சாரும். இது தொடர்பிலான ஆலோசனைகள் தேவை எனில் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கேட்க முடியும்.
அரச நிகழ்வுகளில் ஜனாதிபதி வேட்பாளர் அல்லது அரசியல்வாதி பங்கு கொள்ளுமிடத்து பதாதைகள் காட்சிப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள் பங்கு கொள்ளும் நிகழ்வுகளை இயன்றளவு குறைத்துக்கொள்ளுமாறும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இவ்வாறான நிகழ்வுகள் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளின் ஊடகப் பிரிவு ஒளிப்பதிவு செய்யும். அவ்வாறான ஒளிப்பதிவுகளில் அரசியல்வாதிகள் இருப்பார்களானால் அதனை ஒழுங்கு செய்த அரச அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.