சிறுபான்மை இனத்தவர்கள் அல்ல ஏனைய இனத்தவர்

sajith 1
sajith 1

இலங்கை தமிழர்கள், முஸ்லிம்கள், பறங்கியர்கள், மலாயர் ஆகியோரை சிறுபான்மை இனத்தவர் எனக் கூறுவது தவறு எனவும் அவர்கள் ஏனைய இனத்தவர்கள் என அழைக்கப்பட வேண்டும் எனவும் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ நேற்று கொழும்பில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

பல இடங்களில் சிறுபான்மை இனத்தவர் என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றனர். நான் சிறுபான்மை இனம் என்ற வார்த்தையை பயன்படுத்த மாட்டேன். ஏனைய இனத்தவர் என்றே அவர்களை அடையாளப்படுத்துவேன்.

சிறுபான்மை என்று கூறும் போது சற்று தாழ்ந்ததை போன்றது என்பது எனது உணர்வு எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.