தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான அவசர சந்திப்பு

7ad 1
7ad 1

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான அவசர சந்திப்பு ஒன்று நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு நேற்று மாலை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் உள்ள க .வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் இடம்பெற்றது.

சந்திப்பில் ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன், தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கை பரப்புச் செயலாளர் க.அருந்தவபாலன் மற்றும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் க.சர்வேஸ்வரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.