நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் மழை

.jpg
.jpg

மன்னாரிலிருந்து புத்தளம் மற்றும் காலி ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புத்தளத்திலிருந்து காலி வரையான கடற்பரப்புகளில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

தென்மேற்கு அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 10-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.