சீ.மூ இராசமாணிக்கம் அவர்களின் ஞாபகார்த்த தினம்

SMRasamanickam
SMRasamanickam

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காலம்சென்ற மட்டக்களப்பு மாவட்ட பட்டிருப்புத் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.மூ இராசமாணிக்கம் அவர்களின் 45வது ஞாபகார்த்த தின நிகழ்வு எதிர்வரும் 2019.10.07ந் திகதி திங்கட்கிழமை சீ.மூ. இராசமாணிக்கம் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

சீ.மூ.இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறும் குறித்த நிகழ்வில் களுவாஞ்சிகுடி பிரதேசத்தின் மத்தியில் அமைந்துள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி (நேரம் 10.30) செலுத்தப்படுவதுடன் நினைவுப்பேருரை நிகழ்வுகள் காலை 10.45 மணிமுதல் சீ.மூ. இராசமாணிக்கம் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

1947ம் ஆண்டு முதல் 1970ம் ஆண்டுவரை நடைபெற்ற மூன்று தேர்தல்களில் வெற்றிபெற்று தமிழ் மக்களின் பிரதிநியாக செயற்பட்டிருந்தது டன், சுமார் 22 வருட அரசியல் அனுபவத்தினைக் கொண்டு மக்களுக்கான அரும் பணிபணிகளை ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.