தமிழ் தேசிய இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாள் நினைவேந்தல்!

IMG 0440
IMG 0440

தமிழ் தேசிய இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாள் நினைவேந்தல் இன்று யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பாடசாலை முன்றலில் இன்று (15) காலை 9:30 மணிக்கு இடம் பெற்றது.

முதல் நிகழ்வாக பொது ஈகை சுடர் ஏற்றப்பட்டது.முதல் பொது ஈகை சுடரினை தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஏற்றிவைத்ததை தொடர்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொது செயலர் செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி ந.காண்டீபன், மகளிர் அணி பொறுப்பாளர் வாசுகி சுதாகரன்,துணை தலைவி திருமதி கிருபா கிரிதரன், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் றஜிதா விஜயழகன், வடமராட்சி கிழக்கு அமைப்பாளர் இ.முரளீதரன் உட்பட பலரும் ஏற்றியதுடன் மலர் வணக்கம் செலுத்தி அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மகா வித்தியாலயத்தின் சந்திரிகா அம்மணி ஆட்சிக் காலத்தில் (1995) ஆம் ஆண்டு செப்டெம்பர் (22) ஆம் திகதி இலங்கை விமானப்படை மேற்கொண்ட குண்டுவீச்சித் தாக்குதலில் 21 மாணவர்கள் உட்பட 39 பேர் படுகொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நினைவேந்தல் நிறைவுற்று சில மணி நேரங்களின் பின்னர் பருத்தித்துறை காவல்துறையினர் மற்றும் இராணுவம் என பல வாகனங்கள் உந்துருளிகளில் வருகை தந்திருந்தனர்.

எனினும் நினைவேந்தல் நிறைவுற்றதால் அவர்கள் முரண்பாடு ஏதும் இன்றி திரும்பி சென்றதுடன் இன்றைய (15) தினம் நாகர்கோவில் கிராமத்திற்கு செல்வோர்கள் அனைவரும் இராணுவத்தினரால் நாகர்கோவில் சந்தி பகுதியில் வைத்து ஆள் அடையாளம் பரிசீலிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.