புலிகளின் முடிவை பகிரங்கமாக எதிர்த்த கிளிநொச்சிவாசி – சிறிதரன் சொன்ன கதை

ranil
ranil

தமிழீழ விடுதலைப் புலிகளின் முடிவை கிளிநொச்சிவாசி ஒருவர் பகிரங்கமாக எதிர்த்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் என்ன நிலைப்பாடு எடுப்பது என்பது தொடர்பில், யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் தமிழரசுக் கட்சி சார்பாக கலந்துகொண்டபோதே நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிப்பது தொடர்பான கருத்து ஒன்றுக்கு பதிலளித்த சிறிதரன், தமிழீழ விடுதலைப் புலிகள் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கும் படி சொன்னபோதும் கிளிநொச்சியில் சைக்கிளில் சென்று ஒருவர் வாக்களித்ததாக தெரிவித்தார்.