நேற்றைய தினம் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சிறிதரனுக்கும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் மணிவண்ணன் அவர்களுக்கும் இடையில் உரசல் ஒன்று ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் பகிஸ்கரிப்புத் தொடர்பாக கருத்து முன்வைக்கப்பட்டபோது அதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட் ஆகியன எதிர்ப்புத் தெரிவித்தன.
இதன்போது, அப்படியானால் அனைவரும் வாக்களித்து சஜித்தை வெல்ல வைக்கப் போகிறீர்களா என அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் பிரதிநிதி மணிவண்ணன் கேள்வியெழுப்பினார். அப்படியானால் வாக்களிக்காமல் பகிஷ்கரித்து கோட்டாவை வெல்ல வைக்கப் போகிறீர்களா என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதி சிறிதரன் பதில் கேள்வியெழுப்பினார்.
(தகவல் உதவி : தமிழ்ப் பக்கம்)