நெடுங்கேணியில் புதையல் தோண்ட முற்பட்ட இருவர் கைது!

Arrested Handcuff
Arrested Handcuff

வவுனியா வடக்கு – நெடுங்கேணி, ஐயன் கோவில் காட்டுப் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட இருவர் நெடுங் கேணிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுங்கேணிப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது ஒலுமடு பகுதியைச் சேர்ந்த 36 மற்றும் 24 வயதுடைய சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட மண்வெட்டி உட்பட சில பொருள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.