வேட்புமனு தாக்கல் நிறைவு- 35 பேர் தேர்தலில் போட்டி

ELection Dep
ELection Dep

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்படும் நேரமானது காலை 11.00 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளது.

தேர்தலில் போட்டியிடுவதற்காக மொத்தம் 41 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்த போதும் 35 வேட்பாளர்கள் தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்து கட்டுப்பணம் செலுத்திய சமல் ராஜபக்ஷ மற்றும் குமார வெல்கம ஆகியோர் வேட்பு மனுக்களை இன்று தாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில் தாக்கல் செய்துள்ள வேட்புமனுக்களுக்கு இரண்டு எதிர்ப்புகள் கிடைக்கப் பெற்ற நிலையில் அவை நிராகரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிகளுக்கமைவாக இந்த வேட்பு மனுதாக்கல் இடம்பெற்றிருந்தமையால் இவற்றுக்கு எதிரான ஆட்சேபனை ஏற்றுக்கொள்ளப்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.