கருணாவுக்கு நான் பதில்கூறத் தேவையில்லை: சுமந்திரன்

karuna sumanthiran
karuna sumanthiran

கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் யாரென்று மக்களுக்கு தெரியும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை – அக்கரைப்பற்று ஆலையடி வேம்பு பகுதியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோது கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீதும் சுமந்திரன் மீதும் விமர்சனங்களை சுமத்தி வந்தார்.

சுமந்திரனை தேர்தல் வியாபாரி என்று கருணா கூறியிருந்தமை தொடர்பில், ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதில் அளித்த சுமந்திரன், “கருணாவின் கேள்விகளுக்கு நான் பதிலளிக்க வேண்டிய தேவை இல்லை. கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்களுக்கு கருணா என்பவர் யார் என்று விஷேடமாக நன்றாகத் தெரியும். கண்டவர்களின் கூற்றுக்கு பதிலளிக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை” என்றும் சுமந்திரன் மேலும் குறிப்பிட்டார்.