ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சத்திரசிகிச்சையாகவே அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது முகநூலில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சத்திரசிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தென்னிலங்கை அரசியல்வாதிகளின் மத்தியில் மாறுபட்ட நபராக கருதப்படும் பாலித, கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்காக நிவாரணப் பணிகளை தனியாக மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.