அரச அச்சகத்துக்கு பலத்த பாதுகாப்பு

print
print

ஜனாதிபதித் தேர்தல் அடுத்த மாதம் 16ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தலுக்கான பிரசார பணிகள் இடம்பெற்று வருகின்றன.

அரச அச்சக கூட்டுத்தாபனத்தினால் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை அச்சடிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதனால், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அங்கு, பொலிஸ் அதிகாரிகள் 41 பேரடங்கிய விசேட குழுவொன்றும், பொலிஸ் சாவடியும் நிறுவப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அதிகாரி ருவன் குணசேகர தெரிவித்தார்.

24 மணிநேரம் தொடர்ச்சியாக இயங்கும் இந்த பொலிஸ் சாவடியில், பொரளை பொலிஸ் நிலையம் உள்ளிட்ட கொழும்பிலுள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றுவோர் இணை சேவைக்கு இணைக்கப்பட்டுள்ளன.

வாக்காளர் அட்டைகளை அச்சடிக்கும் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர், பொலிஸ் பாதுகாப்புடன் அவை விநியோகிக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.