பதுளையில் இருந்து கொழும்பை நோக்கிப் பயணித்த புகையிரதம் தடம் புரண்டதில், மலையகத்திற்கான புகையிரத சேவை பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.
பட்டிபொல மற்றும் அம்பேவெல பகுதிகளுக்கு இடையிலேயே இவ்வாறு புகையிரதம் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம் புரண்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த புகையிரத சேவை நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு சேவைப் பிரிவு தெரிவித்துள்ளது.