பிரபல அறிவிப்பாளர் எஸ். நடராஜசிவம் காலமானார்!

nada anna
nada anna

ஈழத்தின் பிரபல அறிவிப்பாளரும் வானொலிக் கலைஞருமான எஸ். நடராஜசிவம் நேற்று காலமானார்.

எஸ். நடராஜசிவம் இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர்களில் ஒருவர். திறமை வாய்ந்த வானொலி, தொலைக்காட்சி, திரைப்பட, மேடை நடிகருமாவார்.

இவர் ஒரு சிறந்த நடிகருமாவார். ஏராளமான வானொலி, மேடை, தொலைகாட்சி நாடகங்களில் நடித்து மக்கள் அபிமானத்தை வென்றவர்.

ரூபவாஹினியில் தயாரிக்கப்பட்ட முதலாவது தொலைக்காட்சி நாடகம் என்ற பெருமையைப்பெற்ற, கலாநிதி ஜே. ஜெயமோகன் எழுதிய ‘கற்பனைகள் கலைவதில்லை’ என்ற நாடகத்தில் கதாநாயகனாக நடித்தவர். தொடர்ந்து பல சிங்களத் தொடர் நாடகங்களில் நடித்தவர்.

தென்னிந்திய நடிகை ராதிகா தயாரித்த, மனோபாலா இயக்கிய ‘ மீண்டும் மீண்டும் நான்’ நாடகம் குறிப்பிடத்தக்கது.  அது மட்டுமல்ல திரைப்படங்களிலும் தன பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.  

இந்தியக் கலைஞர்களும் இணந்து நடித்த பாதை மாறிய பருவங்கள்”, புலம் பெயர்ந்தவர்களால் இலங்கையில் தயாரிக்கப்பட்ட ‘காதல்கடிதம்’ ‘திரிசூல’ – சிங்களத் திரைப்படம் ‘யுக கினிமத்த’ – சிங்களத் திரைப்படம், ‘திகவி’ – சிங்களத்திரைப்படம் முதலானவை குறிப்பிடத்தக்கவை.

இவரது மனைவியும் பிரபல அறிவிப்பாளர் புவனலோஜினி என்பது குறிப்பிடத்தக்கது.