இலங்கை அரசு கிண்ணம் வென்றதை தலைவர் கொண்டாடினார் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கூறியது, அரசியலுக்கான பொய் என்று, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.
அத்துடன் தலைவர் பிரபாகரன் அவ்வளவு தூரம் பிழையானவர் இல்லை என்று சிறீதரன் கூறியிருப்பது தொடர்பிலும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.