கருணாவை புனர்வாழ்விற்கு உட்படுத்தினோம்- ரஞ்சித் மத்தும பண்டார

6ce8174e82984e94a7a98889b7c17e32 XL 620x330 1
6ce8174e82984e94a7a98889b7c17e32 XL 620x330 1

நாங்கள்தான் கருணாவை தாய்லாந்திற்கு அனுப்பி, புனர்வாழ்விற்கு உட்படுத்தினோம் என ஜக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக களமிறங்கியுள்ள ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

கருணா அம்மான் வெளியிட்டுள்ள சர்ச்சையான கருத்து தொடர்பாக எந்ததொரு நடவடிக்கையும் இதுவரை முன்னெடுக்கப்படாமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக ரஞ்சித் மத்துமபண்டார மேலும் கூறியுள்ளதாவது,  “ கருணாவை நாங்கள் சீர்த்திருத்தினோம். அதன்பின்னரே அவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகினார்.

நாங்கள் கருணாவுக்கு வேறு எதனையும் செய்யவில்லை. ஆனால் தற்போது பொதுஜன பெரமுனவில் உள்ளவர்கள்ததான் அவரை அரசியல்வாதியாக மாற்றியுள்ளனர்.

எனினும் கருணா அம்மான், தனது அறிக்கை தொடர்பாக  உண்மையான விளக்கத்தை  கட்டாயம் வழங்க வேண்டும்.

மேலும் நாம், ஆட்சிக்கு வந்தவுடன் அவரை நீதிமன்றத்தில் நிறுத்துவோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.