அனைத்துப் பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் வழமை போன்று இடம்பெறவுள்ளது.
அந்தந்த பல்கலைக்கழக துணைவேந்தர்கள் இதற்குத் தேவையான திட்டத்தைத் தயார் செய்துள்ளனர் என்று பல்கலைக்கழக மானியங்கள்ஆணைக்குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் ஏ.எஸ்.எம்.குணரத்ன தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக ஒரு மாத காலம் பல்கலைக்கழக கல்வி
நடவடிக்கைகள் தடைப்பட்டிருந்தன.
கடந்த வருடத்தில் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களைஉள்வாங்கும் பணி தடைப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் அப்பணிகள் மீண்டும் ஆரம்பமாவதாகவும் அவர் கூறியுள்ளார்.