கோத்தாவுக்கு ஆதர வில்லை – ஹிஸ்புல்லா, ராசிக் பதில்

slpp
slpp

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் பலரும் ஜனாதிபதி வேட்பாளருக்கு தமது ஆதரவுகளை தெரிவித்து வருகின்ற நிலையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர், ஏ.எல்.எம்.ஏ.ஹிஸ்புல்லாவும், பௌத்த தர்மத்தை கடுமையாக அவமதித்த, இலங்கை தௌஹீத் ஜமாஅத் அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்திய அப்துல் ராசிக் என்பவரும் ஆதரவளிப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் அவர்கள் இருவரும் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எவ்விதத்திலும் ஆதரவளிக்க வில்லை என, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் டளஸ் அழகபெரும விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்திகள் யாவும் பொய்யாகும் என அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.