நாட்டின் அம்பலாங்கொடை-கஹவ-மீடியாகொட-அகுரல பிரதேசத்தில் கடலலையின் சீற்றம் அதிகரித்து வரும் நிலையில் கொழும்பு-காலி பிரதான வீதிக்கு மேலாக பாரிய அலைகள் மேலெழுந்ததால் குறித்த வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கடலலையுடன் கழிவுகளும் மணல்களும் குறித்த வீதியில் குவிந்து வருவதன் காரணமாக இவ்வாறு போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதிகளில் தற்போது வரையில் கடலலையின் சீற்றம் காரணமாக இலகு ரக வாகன போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.