நீரில் இழுத்துச் செல்லப்பட்ட இரு சிறுமிகள்!

drowning
drowning

நாட்டில் களுத்துறை – பயாகல – மக்கொன்ன – உஸ்வெல்ல கடற்பரப்பில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சிறுமிகள் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உறவினர் ஒருவருடன் நீராட சென்றபோதே அவர்கள் நீரில் இழுத்துச் செல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.