ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான பாதுகாப்பு

sirisena 1
sirisena 1

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு போதியளவு பாதுகாப்பை வழங்குவதற்கு பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்கள் கேட்கும் அடிப்படையில் பாதுகாப்பு ஒழுங்குகளை செய்யுமாறு இதன்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (Oct.15) தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டம் இடம்பெற்ற போது, பாதுகாப்பு பிரிவுகளின் தலைவர்களுக்கு இது குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.