இன்றைய வானிலை அறிக்கை!

timthumb 1 1
timthumb 1 1

இலங்கையின் பலவேறு கடற்பகுதிகளில் அதிகரித்து வரும் கடல் அலைகளின் சீற்றம் மேலும் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரவித்துள்ளது.

பேருவல முதல் மாத்தரை,காலி,ஹம்பாந்தோட்டை ஊடாக செல்லும் பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் இவ்வாறு கடல் அலையின் சீற்றம் அதிகரிக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிடப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது தொடர்பில் கூடுதல் அவதானத்துடன் செயற்ப்பட வேண்டும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடற்றொழிலில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களும் மிக அவதானத்துடன் செயற்ப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.