ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக பொலிஸாருக்கு மாத்திரம் 668 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவண் குணசேகர தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.
பொலிஸ் திணைக்களம் இந்த நிதியை சுயாதீன தேர்தல்கள் ஆணைக் குழுவிடம் கோரியுள்ளதாகவும் அதில் தற்போதுவரை 368.65 மில்லியன் ரூபாவுக்கு அனுமதி கிடைத்துள்ளதகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.