சிவில் பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர் ஒருவர் தனது கடமைநேர துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாறை – புத்தங்கல பகுதியிலேயே குறித்த சிவில் பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.