தற்கொலை குண்டுதாரியான புலஸ்தினி புலனாய்வுத் துறையினரின் கண்களுக்கு மண்ணை தூவி தப்பியது எவ்வாறு?

1594784384625.500.560.350.160.300.053.800.900.160.90 1

ஊயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலின் ஸாரானின் குழுவைச் சேர்ந்த ஸாரா என்றழைக்கப்படும் தற்கொலை குண்டுதாரியான புலத்தினி புலனாய்வு பிரிவிரின் கண்களுக்கு மண்தூவி தப்பி ஓடி ஒருவருடம் கடந்த பின்னரே அவர் தப்பி ஓடியுள்ளதாக தேசிய புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். அவர் எவ்வாறு தப்பி ஓடியுள்ளார் என புலனாய்வின் துப்பு துலக்கலில் தெரியவந்துள்ளது

இது தொடர்பாக புலனாய்வு வட்டாரங்களில் இருந்து தெரியவருவதாவது இரண்டாம் கட்ட தாக்குதலுக்கு தயார இருந்து ஸாரா மற்றும் ஜாரானின் சகோதரர்கள் சாய்ந்தமருதில் மறைந்திருந்து தயாராக இருந்த போது தேசிய புலனாய்வு பிரிவின் தகவலாளியான லொறி சாரதி மாச் மாதம் 30 ம் திகதி கொழும்பில் இருந்து சம்மாந்துறை பிரதேசத்தில் களஞ்சியசாலை ஒன்றுக்கு கொண்டுவரப்பட்டு இறக்கப்பட்ட பொருட்கள் தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவுக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்மாந்துறையை முதலில் புலனாய்வு பிரிவினர் முற்றுகையிட்டனர்.

கொழும்பைச் சேர்ந்த குறித்த தகவலாளி கடந்த 2019 மாச் 30 திகதி கொழும்பில் இருந்து லொறி ஒன்றில் சம்மாந்துறை பிரதேசத்திற்கு ராண்போட் மூலம் பொருட்களை கொண்டுவந்து இறக்கியுள்ளார். அப்போது பொருட்களை இறக்கும்போது என்ன பொருட்கள் என வினாவியபோது சர்பத்து தயாரிக்கும் தெரிற்சாலைக்கான பொருட்கள் என அவருக்கு தெரிவிக்கப்பட்டது

பொருட்களை இறக்கும் போது அதில் திரவம் உள்ள ஒரு போத்தலின் மூடி களன்று அவரின் வலக்கையில் ஒரு துளி திரவம் வீழ்ந்ததில் அவரின் கையை சுட்டுள்ளது அப்போது அவர் சந்தேகப்படவில்லை ஏதே ஒரு திரவம் என அந்த பொருட்களை இறக்கிவிட்டு கொழும்புக்கு திரும்பி சென்றுள்ளார்

பின்னர் 21ம் ஏப்பில் குண்டு வெடிப்பு இடம்பெற்ற பிற்பாடு இவருக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது அதாவது இறக்கப்பட்ட பொருட்களுக்கும் இவர்களுக்கும் சம்மந்தம் இருக்க வாய்ப்பு இருக்கின்றது என்ற அடிப்படையில் அவர் சம்மாந்துறைக்கு முதல் தடவை வந்துள்ளதால் குறித்த பகுதியில் தண்ணீர் ஓடும் ஒரு வாய்க்கால் பகுதிக்கு அருகில் சர்பத் கடையுள்ளதாகவும் அந்த கடையில் சர்பத்வாங்கி குடித்த போது இனிப்பு அதிகமாக இருப்பதால் மிகுதியை அந்த நீராடும் வாய்க்காலில் ஊற்றியதாகவும் அவருக்கு ஞாபகத்தில் இருந்த இந்த தகவலை தேசிய புலனாய்வு பிரிவுக்கு வழங்கினார்

இந்த தகவலை வைத்து அம்பாறை மாவட்ட தேசிய புலனாய்வு பிரிவினர் அந்த பகுதியை சல்லடைபோட்டு தேடிய நிலையில் 2019 ஏப்பில் 26ம் திகதி அந்த நீரோடை மற்றும் சர்பத்கடையை கண்டுபிடித்து பொருட்களை இறக்கிய வீட்டை கண்டுபிடித்தனர்.

கண்டுபிடிக்கப்பட்ட வீட்டை முற்றுகையிட்ட புலனாய்வு துறையினர் வீட்டின் கார் பாக் ஒன்றை கல்முனையில் மரக்கறி வியாபாரம் செய்துவந்தவரும் ஸாரானின் குழுவின் வழிகாட்டியாக செயற்பட்ட நியாஸ் என்பவர் அம்பாறையில் சப்பாத்து தொழிற்சாலை வைத்திருப்பதாகவும் அந்த தொழிற்சாலையை அங்கிருந்து அகற்றுமாறு தெரிவித்ததையடுத்து அந்த தொழிற்சாலை பொருட்களை வைப்பதற்கான களஞ்சியசாலையாக 5 ஆயிரம் ரூபாவுக்கு வாடகைக்கு வழங்கியயுள்ளதுடன் அந்த களஞ்சியசாலை பூட்டியிருந்துள்ளது. குறித்த களஞ்சியசாலையை திறப்பதற்கா வீட்டின் உரிமையாளரிமிருந்த டம்மி சாவியை பயன்படுத்தி அந்த களஞ்சியசாலையை திறக்க முற்பட்டபோது அங்கு பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் சென்ற நிலையில் அந்த களஞ்சியசாலை திறக்கப்பட்ட போது அங்கு குண்டு தயாரிப்பதற்கான வெடிபொருட்கள், ஜ.எஸ்.ஜ.எஸ் அமைப்பின் கொடிகளை மீட்கப்பட்டன.

குண்டு வெடிப்பு நடப்பதற்கு முன்னர் சாய்ந்தமருது, நிந்தவூர், அட்டாளைச்சேனை பகுதியில் வாடகை வீடுகள் தங்குவதற்கு பயன்படுத்தப்பட்டதுடன்; சம்மாந்துறையில் வாடகைக்கு எடுக்கப்பட்ட வீட்டின் கராச் மட்டும் ஆயுத களஞ்சியசாலையாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற தகவலின் அடிப்படையில் இதே நேரத்தில் தேசிய புலனாய்வு பிரிவின் இன்னொரு குழுவினர் நிந்தவூர், அட்டாளைச்சேனையில் தங்கியிருந்த வீடுகளை முற்றுகையிட்ட போது அவர்கள் அங்கிருந்து தப்பி வான் ஒன்றில் சாய்ந்தமருது வெரிவேரியன் கிராமத்தில் உள்ள வீட்டை சென்றடைந்துள்ளனர்.

அப்போது ஸாரா என்றழைக்கப்படும் புலஸ்த்தினி 5 கிலோ எடை கொண்ட குண்டை அவரது இடுப்பில் கட்டியவாறு வானில் சென்றதாகவும் அந்த வாகனத்தை இடையில் பாதுகாப்பு படையினர் வழிமறித்து சோதனையிட்டால் அந்த இடத்தில் தற்கொலை தாக்குதல் நடாத்த திட்டமிட்டுள்ளதாக கைது செய்யப்பட்ட ஸாரானின் மனைவி மற்றும் புலனாய்வு விசாரணையில் தெரியவந்துள்ளது

இந்த நிலையில் ஏப்பில் 26ம் திகதி மாலையில் வீதி போக்குவரத்து பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசியில் வெரிவேரியன் கிராமத்தில் ஒருவர் துப்பாக்கிபிரயோகம் செய்வதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து அந்த பகுதிக்கு இராணுவத்தினர் விசேட அதிரடிப்படையின் தேசிய புலனாய்வு பிரிவினர் பொலிஸார் நகர்ந்தபோது அங்கு 3 குண்டு வெடிப்பு இடம்பெற்றதுடன் துப்பாக்கி சூட்டுச் சம்பவமும் இடம்பெற்ற நிலையில் ஸாரானின் மனைவி குழந்தை காப்பாற்றப்பட்டதுடன் அதில் 17 பேர் உயிரிழந்த நிலையல் சடலமாக மீட்கப்பட்டதுடன் ஆயுதங்களையும் மீட்டனர்.

இதன் பின்னர் இதில் கைது செய்யப்பட்ட ஸாரானின் மனைவி மற்றும் ஏனையவர்களிடம் சி.ஜ.டி யினர் மேற்கொண்ட விசாரனையின் அடிப்படையில் சி.ஜ.டி. விசாரணையில் ஸாராவும் இறந்து விட்டதாக தீர்மானிக்கின்றனர்.

இதன் பின்னர் சடலமாக மீட்கப்பட்வர்கள் தொடர்பான அவர்களை உறுதிப்படுத்துவதற்கான ஸாராவின் தாயார் வரவழைக்கப்பட்டு அவரின் இரத்தம் எடுக்கப்பட்டதுடன் ஏனையவர்களின் உறவினரது இரத்தம் எடுக்கப்பட்டு மரபணு பரிசோதனை நடாத்தப்பட்ட நிலையில் ஏனையவர்களின் மரபணு பரிசோதனை பொருந்திய நிலையில் ஸாராவின் தாயாரின் மரபணு பரிசோதனையில் எதுவும் பொருந்த வில்லை அடுத்த தரம் இரத்தம் எடுக்கப்பட்டு மரபபணு பரிசோதனையாக இரண்டாம் தரமும் பொருந்த வில்லை

இந்த நிலையில் புலனாய்வு பிரிவினர் அடுத்த கட்டமாக ஸாரா பிறந்தபோது வைத்தியசாலையில் சிலவேளை குழந்தை மாற்றப்பட்டிருக்கலாம் என சந்தேகம் கொண்டு அவர் பிறந்த களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் பழைய பதிவுகளான ஏடுகளை தேடி ஆராயந்தபோது அன்றை தினம் அந்த வைத்தியசாலையில் அவர் மட்டும் தான் பிறந்துள்ளதாக ஆவணங்கள் மூலம் கண்டறியப்பட்டதையடுத்து புலனாய்வு துறையினர் ஸாரா தப்பி ஓடக்கூடிய வாய்ப்பு இருப்பதாக முடிவுக்கு வருகின்றனர்.

அதன் பின்னர் தேசிய புலனாய்வுத் துறையினர் அவரை தேடத் தொடங்கு கின்றனர். அதில் முதற்கட்டமாக ஸாராவின் ஊரான மட்டக்களப்பு மாங்காடு பிரதேசத்தில் தேடியபோது அவர்களுக்கு ஒரு தகவல் கிடைத்தது அதில் ஸாரா உயிருடன் இருப்பதுடன் புலனாய்வு துறையினரின் கண்களிள் மண்ணைத்தூவி தப்பியுள்ளார் என தெரியவந்த நிலையில் அந்த பகுதியில் 3 வீடுகளில் மாறிமாறி தங்கவைக்கப்பட்டதான நிரந்தர சாட்சி ஒன்றின் மூலம் தகவல் கிடைத்தது.

அதனை தொடர்ந்து புலனாய்வு பிரிவினர் தேடிய தகவலுக்கு அமைய ஸாராவின் தாயாரின் சகோதரியான கீதாவின் கணவரின் சகோதரான தேவகுமார் கடந்த காலங்களில் படகு மூலம் அவுஸ்ரேலியாவுக்கு லெவினி என்கின்ற பெண்ணுடன் சேர்ந்து ஆட்கடத்தலில் ஈடுபட்டுவந்துள்ளதாகவும் அதன் அடிப்படையில் அவர் மன்னார். யாழ்ப்பாணம் போன்ற இலங்கையின் கரையோராப் பிரதேசங்களில் உள்ளவர்களுடன் தொடர்பு உள்ளதன் அடிப்படையில் இலங்கையில் ஏதே ஒரு கடற்கரைபரப்பில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவலின் பிரகாரம் அவரை சி.ஜ.டி யினர் வீட்டில் வைத்து கைது செய்தனர்

அதேவேளை ஸாராவின் கணவரான கட்டுவாப்பிட்டியில் தற்கொலை குண்டுதாக்குதலில் உயிரிழந்த வாழைச்சேனையைச் சேர்ந்த முகமது ஹாஸ்தூன் திருமணம் முடிப்பதற்கு முன்னர் அவருடன் தனியார் கல்வி நிலையத்தில் கல்விகற்றுவந்து முஸ்லிம் இளைஞர் ஒருவர் அவரை முஸ்லிம் மதத்திற்கு மதமாற்றம் செய்யமுற்படுவதாக ஸாராவின் தாயார் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யசென்ற போது அங்கு கடமையாற்றிய பொலிஸ் உப பரிசோதகர் நாகூர்தம்பி அபூபக்கர் அந்த முறைப்பாடை அவர் விசாரித்த நிலையில் ஸாராவின் குடும்பத்துடன் உறவு ஏற்படுத்தப்பட்டு அவர் அந்த குடும்பத்துடன் ஒட்டி உறவாடி உண்டு மகிழ்ந்து உறவை இறுதிவரை பேணிவந்த நிலையில் மாங்காட்டில் தலைமறைவாகி இருந்த ஸாராவை அவர் காரில் ஏற்றி சென்றுள்ளார். என தேசிய புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த நிரந்தர சாட்சி ஒன்றின் தகவலின் பிரகாரம் அவரை அக்கரைப்பற்றில் அவரது வீட்டில்வைத்து கடந்த 13 ம் திகதி அதிகாலை 5 மணியளவில் சி.ஜ.டி. யினர் கைது செய்தனர்

தேசிய புலனாய்வு பிரிவின் தகவல்களின் அடிப்படையில் ஸாரா அங்கிருந்து தப்பி இந்தியாவுக்கு ஓடியுள்ளதாக புலனாய்வு பிரிவினர் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளதுடன் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனுடன் தொடர்புபட்ட பலர் மிக விரைவில் கைது செய்யப்படுவர் என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை ஊயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு இடம்பெறுவதற்கு இரு வாரங்களுக்கு முன்னார் தேசிய புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அம்பாறை மாவட்ட தேசிய புலனாய்வு பிரிவின் தமிழ் உத்தியோகத்தர் ஒருவர் முதல் முதலாக ஸாரா தொடர்பாக அவரை தேடி அவரது மட்டக்களப்பு மாங்காடு வீட்டிற்கு சென்று விசாணை மேற்கொண்டு தேசிய புலனாய்வு தலைமையத்துக்கு அறிவித்துள்ள போதும் அப்போது அவர்கள் அதில் கவனம்; செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது