குண்டுதாரியின் மனைவி பொலிஸ் பரிசோதகரின் வண்டியில் செல்வதைக் கண்கண்ட சாட்சியுள்ளது

625.500.560.350.160.300.053.800.900.160.90 2 8
625.500.560.350.160.300.053.800.900.160.90 2 8

நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயம் மீது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலின் குண்டுதாரியான மொஹம்மட் ஹஸ்தூனின் மனைவியான, 2 ஆம் கட்ட தாக்குதலுக்கு தயாராக இருந்ததாக கூறப்படும் புலஸ்தினி ராஜேந்திரன் அல்லது சாரா ஜஸ்மின் அல்லது சாரா கடந்த 2019 செப்டம்பர் மாதம் இள மஞ்சள் நிற கெப் வண்டியில், பிரதான பொலிஸ் பரிசோதகர் அபூபக்கருடன் செல்வதைக் கண் கண்ட சாட்சியாளர் உள்ளதாக  பிரதான பொலிஸ் பரிசோதகர் அர்ஜுன மஹின்கந்த தெரிவித்தார்.

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில்  சேவையாற்றும்  பிரதான பொலிஸ் பரிசோதகர் அர்ஜுன மஹின்கந்த நேற்று ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்க அழைக்கப்பட்ட போதே அவர் இந்த தகவலை வெளிப்படுத்தினார்.

சாரா ஜஸ்மின் அல்லது சாரா எனும் குறித்த பெண் கடந்த 2019 செப்டம்பர் மாதம் நாட்டிலிருந்து தப்பி இந்தியாவுக்கு சென்றுள்ளமை தொடர்பில் சந்தேகிக்கத்தக்க  சாட்சியங்கள் உள்ளதாகவும் அவர் இதன்போது சாட்சியமளித்தார்.

21/4 உயிர்த்த ஞாயிறுதினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்களை மையப்படுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க  விசாரணை ஆணைக் குழுக்கள் சட்டத்தின் (393 ஆம் அதிகாரம்) 2 ஆம் அத்தியாயத்தின் கீழ் கடந்த 2019 செப்டம்பர் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட ஜனாதிபதி  விசாரணை ஆணைக்குழுவின்  சாட்சி விசாரணைகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக்குழுவில்  இடம்பெற்றது.

ஆணைக் குழுவின் தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி  ஜனக் டி சில்வாவின் தலமையிலான மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி  நிசங்க பந்துல கருணாரத்ன,  ஓய்வுபெற்ற நீதிபதிகளான  நிஹால் சுனில் ரஜபக்ஷ,  அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி ஆகியோர் முன்னிலையில்    குறித்த சாட்சிப் பதிவுகள் இடம்பெற்றன.

இதன்போது அரசின் மேலதிக சொலிசிட்டர்  ஜெனரல் அய்ஷா ஜினசேனவின் கேள்விகளுக்கு பதிலளித்தவாறு பிரதான பொலிஸ் பரிசோதகர் அர்ஜுன மஹின்கந்த  சாட்சியமளித்தார்.

அதன் சுருக்கம் வருமாறு,

‘ உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயம் மீது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலின் குண்டுதாரியான மொஹம்மட் ஹஸ்தூனின் மனைவியான புலஸ்தினி ராஜேந்திரன் அல்லது சாரா, களுவாஞ்சிக்குடியிலிருந்து இந்தியாவுக்கு தப்பிச் செல்ல உதவியமை தொடர்பில், சி.சி.டி. எனப்படும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு, சாராவின் மாமாவை கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்.

உண்மையில் கல்முனை – சாய்ந்தமருது வெலிவொலிவேரியன் கிராமப்பகுதியில்  கடந்த 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி வீடொன்றுக்குள் குண்டை வெடிக்கச் செய்து நடாத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் உயிர் தப்பியதாக  நம்பப்டும் சாரா ஜெஸ்மின் எனும் பெண் களுவாஞ்சிக் குடி , மான்காடு பகுதியில் மறைந்திருந்ததாக கண் கண்ட சாட்சியாளர் ஒருவர் ஊடாக எனக்கு கடந்த 2020 ஜூலை 06  ஆம் திகதி  தகவல் கிடைத்தது. அதன்படி கடந்த ஜூலை 8 ஆம் திகதி நான் மட்டக்களப்பு சென்றேன்.  அங்கு சாராவை நேரில் கண்ட நபரையும் சந்தித்தேன்.