சுற்றிவளைப்பின்போது 1,440 பேர் கைது!

85158 3
85158 3

நாட்டில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல், நேற்று சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி வரையான 24 மணித்தியால காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 1,440 பேர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள், ஆயுதங்கள், சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்தச் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 209 பேரும், ஏனைய குற்றங்களை இழைத்த குற்றச்சாட்டில் 562 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 239 பேரும், கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் 132 பேரும், ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 05 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஆயுதங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 04 பேரும், சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 289 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சுற்றிவளைப்புகளின்போது 12 துளை கொண்ட துப்பாக்கிகள் 05, நாட்டுத் துப்பாக்கிகள் 02 ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன. 6 ஆயிரத்து 289 லீற்றர் சட்டவிரோத மதுபானமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்தோடு, ஹெரோயின், கஞ்சா, ஐஸ் போதைப்பொருள் ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.