தமிழ் கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்க முடியாது- பௌத்த குருமார்கள்

wedaruwe upali
wedaruwe upali

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஐந்து தமிழ் தேசிய கட்சிகள் முன்வைத்துள்ள 13 கோரிக்கைகளுக்கு பௌத்த மதகுருமார்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

ஒற்றையாட்சி நீக்கப்பட வேண்டும், சுயநிர்ணய எல்லை என்ற கோரிக்கையை துளியளவும் ஏற்க முடியாது என அஸ்கிரிய பீடத்தின் உப தேரர் வெனருவே உபாலி தேரர் தெரிவித்துள்ளார்.

கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள எந்தவித யோசனைகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.