மூன்று பேர் வாகன விபத்தில் மரணம்!

1202 1
1202 1

நாட்டின் பேராதெனிய – கம்பளை வீதி கெலிஓய – கரமட பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

உந்துருளியில் மோதுண்டு வீதியில் பயணித்த நபர் ஒருவர் விபத்துக்குள்ளானதனை, தொடர்ந்து மேலும் ஓர் முச்சக்கர வண்டி குறித்த நபருடன் மோதுண்டுள்ளது.

இந்நிலையில் முச்சக்கர வண்டி சிற்றூந்து ஒன்றுடன் மோதுண்டு இரண்டாவது விபத்து நேர்ந்துள்ளது.

குறித்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.