தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலக வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மானிக்கப்பட்ட விஞ்ஞான ஆய்வுகூட திறப்புவிழா நிகழ்வு வவுனியா சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயத்தில் நேற்று இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் ஜெ.மனோகௌரி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்ட வடக்குமாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆய்வுகூடத்தை திறந்து வைத்தார்.
நிகழ்வில் மாகாணகல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன், கல்விசிரேஷ்ட உதவிசெயலாளர் அஞ்சலிதேவி சாந்தசீலன், வவுனியா வடக்கு வலயக்கல்வி பணிப்பாளர் அன்னமலர் சுரேந்தின் கல்வித்திணைக்களத்தின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.