வவுனியா பாடசாலையில் ஆளுனரால் விஞ்ஞான ஆய்வுகூடம் திறந்து வைப்பு

DSC07935
DSC07935

தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலக வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மானிக்கப்பட்ட விஞ்ஞான ஆய்வுகூட திறப்புவிழா நிகழ்வு வவுனியா சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயத்தில் நேற்று இடம்பெற்றது.

DSC07904 1
DSC07904 1

பாடசாலை அதிபர் ஜெ.மனோகௌரி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்ட வடக்குமாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆய்வுகூடத்தை திறந்து வைத்தார். 

DSC07972 1
DSC07972 1

நிகழ்வில் மாகாணகல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன், கல்விசிரேஷ்ட உதவிசெயலாளர் அஞ்சலிதேவி சாந்தசீலன், வவுனியா வடக்கு வலயக்கல்வி பணிப்பாளர் அன்னமலர் சுரேந்தின் கல்வித்திணைக்களத்தின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.