எதிர்வரும் நாட்களில் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

Gaja 2018 11 15 0515Z
Gaja 2018 11 15 0515Z

இன்று தொடக்கம் எதிர்வரும் 6ஆம் திகதி வரை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விசேடமாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் இவ்வாறு பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.