கைது செய்யப்பட்ட நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அதிகாரியிடம் CID விசாரணை!

CID

கைது செய்யப்பட்டுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அதிகாரி அனுருத்த சம்பாயோ மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்

இதனையடுத்து, அவரிடம் வாக்குமூலம் பெற்றதன் பின்னர் நீர்கொழும்பு நீதவானிடம் அவரை இன்று (திங்கட்கிழமை) முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளாரும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நீர்க்கொழும்பு சிறைக் கைதிகளுக்கு சொகுசு வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்த சம்பவம் தொடர்பாக முன்னாள் நீர்க்கொழும்பு சிறைச்சாலை அத்தியட்சகர் அனுருத்த சம்பாயோவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டது.

இதனையடுத்து, பணிநீக்கம் செய்யப்பட்ட அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீர்க்கொழும்பு பதில் நீதவானால் கடந்த 22ஆம் திகதி பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இதன் பின்னர், நீர்க்கொழும்பு பொலிஸ் குழுவொன்றின் முன்னிலையில் நேற்று அவர் சரணடைந்த நிலையில்,  கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.