தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ள போலீசாருக்கான விளக்கம்

IMG 20200803 WA0018

எதிர்வரும் 5ஆம் திகதி இடம்பெறவுள்ள தேர்தல் கடமைக்காக யாழ்ப்பாணத்திலுள்ள 15 பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த போலீசார் தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளார்கள் தேர்தல் கடைமையின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டம் இன்றைய(திங்கட்கிழமை) தினம் யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில் இம்பெற்றது. 

அவர் மேலும் தெரிவிக்கையில்

தேர்தல் விதிமுறை மீறல்களை தடுப்பதோடு மீண்டும் யாழில் கொரோனா தொற்று ஏற்படாத வண்ணம்  தேர்தல் கடமையில் ஈடுபடுங்கள்  என யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோதெரிவித்தார். தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ள  போலீசாருக்கான  தேர்தல் கடமை தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டம் யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில் இடம்பெற்றது அதில்  கலந்து கொண்டு உரையாற்றும் போதே  மேற்கண்டவாறு தெரிவித்தார் 

போலீசாராகிய நாங்கள் முக்கியமான கடமையினை முன்னெடுக்கவுள்ளோம் அதிலும் இம்முறை எமக்கு முன்னுள்ள பெரிய சவால் கொவிட்19 வைரஸ்  வழமையாக  போலீசார் தேர்தல் விதிமுறை மீறல்கள், வன்முறைகளை தடுப்பதற்கும் தேர்தல் கடமையில்  ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

எனினும் இம்முறை தேர்தலில் இரண்டு விடயங்களை நாங்கள் கருத்திலெடுக்க வேண்டும் அதாவது வாக்களிப்பு நிலையங்களில் தேர்தல் விதிமுறைகளை மீறுவோர் தொடர்பிலும் அதேபோல் மீண்டும் கொரோனா  தொற்று ஏற்படாவண்ணம் மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எம்மிடமுள்ளது வாக்களிப்பு நிலையங்களில் கடமையில் உள்ள போலீசார் மூன்று விடயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

  1. வாக்காளர்கள் கட்டாயமாக முககவசம் அணிந்து வர வேண்டும்.
  2. கைகள் கழுவி வாக்களிப்பு நிலையத்திற்குள் செல்ல வேண்டும்
  3. சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்  இதனை நடைமுறைப்படுத்த வேண்டும். 

வழமையாக தேர்தல்கடமைகளில் போலல்லாது இம்முறை தேர்தலில் எமக்கு மேலும் ஒரு பொறுப்பு உள்ளது அதாவது நாட்டில் மேலும் மீண்டும் கொரோனா தொற்று ஏற்படாத வண்ணம் தடுப்பது இம்முறை தேர்தலில் நீங்கள் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடமைகளை சரிவர நிறைவேற்ற வேண்டும் என்றார்.