மூன்றரை வயதான மகளை கொன்ற தந்தைக்கு மரண தண்டனை!

643a1630 0a615a11 court 850x460 acf cropped
643a1630 0a615a11 court 850x460 acf cropped

மகளை கொலை செய்த தந்தை ஒருவருக்கு நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி பிரமில ரத்நாயக்க இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

நுவரெலியா – ராகலை ஹல்கன்னோயாவை சேர்ந்த 41 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தைக்கே இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு 10 ஆம் மாதம் 24 ஆம் திகதி இரவு தனது வீட்டில் மூன்றரை வயதான தனது மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்த குற்றத்திற்காக குற்றவாளிக்கு இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளியின் மனைவி கடந்த 2014ஆம் ஆண்டு குவைத் நாட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார். அந்த பெண் மற்றுமொரு இலங்கை நபருடன் சட்டவிரோத உறவை பேணி வந்ததோடு, தனது குழந்தைகளை கவனிக்காது இருந்துள்ளதால், குற்றவாளி தனது மூன்றரை வயதான மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.