சிறைச்சாலைக்குள் போதைப்பொருட்களை கொண்டுசெல்வதற்காக பயன்படுத்தப்படும் மாற்று வழிகளை தடுப்பது தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் அவதானம் செலுத்தியுள்ளது.
பூனையொன்றின் மூலமாக கொழும்பு மகஸின் சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் அனுப்பப்பட்ட சம்பவம் கண்டறியப்பட்டதை அடுத்து, இவ்வாறு அவதானம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.