தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் முறைப்பாடுகள் 8683 பதிவு!

0 5
0 5

நாட்டில் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையில் 8683 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் ஒரு வன்முறை செயல் கூட இதுவரை பதிவாகவில்லை என தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று முன்தினம் (05) மாலை 05 மணி முதல் நேற்று மாலை 4 மணி வரையான காலப்பகுதியில் 26 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.