அதுருகிரிய பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் சடலாமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கொட்டாஞ்சேனை-அலுத்மாவத்தை பகுதியில் மகிழூர்தியில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதோடு, இதுவொரு தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
சம்பவத்தில் அதுருகிரிய பகுதியை சேர்ந்த 42 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் தனியார் நிறுவனமொன்றில் திட்டமிடல் முகாமையாளராக கடமையாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயிரிழந்த நபர் தொடர்பிலான நீதிமன்ற விசாரணைகளைத் தொடர்ந்து சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.