தேசிய அடையாள அட்டை விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவித்தல்

7697dcc7 281042 650x250 crop

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் NIC விண்ணப்பங்களை விரைவில் சமர்ப்பிக்குமாறு அறிவித்தல்

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை விண்ணப்பங்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாடசாலை அதிபர்கள் ஊடாக குறித்த விண்ணப்பப்படிவங்களை முழுமையாக பூர்த்திசெய்து விரைவில் சமர்ப்பிக்குமாறு ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் தமது விண்ணப்பப்படிவங்களை இதுவரை கையளிக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

15 வயதை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.