எமது மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினரை நியமிப்பது குறித்த தீர்வு இதுவரை பெறப்படவில்லை.
குறித்த பிரச்சினை தொடர்பிலான சட்ட நிலைமையை தீர்க்க தேர்தல் ஆணைக்குழு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு தெரியப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின்போது அத்துரலிய ரத்னதேரர் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.