சபாநாயகர் தெரிவின் பின் பொதுமக்களை நாடாளுமன்றத்திற்கு அனுமதிக்க உத்தேசிப்பு

parliment 3
parliment 3

இலங்கையில் பொதுத்தேர்தலினை அடுத்து நடைபெறவுள்ள முதலாவது நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது பொதுமக்கள் பார்வைகூடம் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உதவி செயலாளர் நாயகம் நீல் இத்தவெலவே இவ்வாறு கூறியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “புதிய சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் பொதுமக்களை நாடாளுமன்றத்திற்கு அனுமதிக்க உத்தேசித்துள்ளோம்.

இதே வேளை நாடாளுமன்றத்திற்கு தெரிவான உறுப்பினர்கள் தற்போது இணைய முறைமை ஊடாக தங்களது சுய தகவல்களை வழங்கியுள்ளனர்” என  தெரிவித்துள்ளார்.