கோத்தபாயவுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்!

poraddam
poraddam

முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான கோத்தாபய ராஜபக்சவை கைது செய்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் யாழ்ப்பாண மாவட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் கல்வியங்காட்டிலுள்ள காணாமற்போனோர் அலுவலகத்தின் முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஐநா அமைதிப்படை வர வேண்டும், காணாமற்போனோர் அலுவலகத்தை அகற்று, கோத்தாவை கைது செய், எங்கள் உறவுகள் எங்கே, சர்வதேசமே உடனடியாக கோத்தாவை கைது செய், குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதி மன்றில் நிறுத்தி பக்கச் சார்பற்ற விசாரணையை நடாத்து, கோத்தா ஒரு உயிர் கொல்லி, எமது பிள்ளைகளுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்க உனக்கு அருகதையில்லை ஆகிய கோசங்களை எழுப்பியிருந்தனர்.